பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடம்.!

கொரோனா அச்சறுத்தல் மத்தியில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்தில் வந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதனிடையே பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் 69 சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று பெட்ரோல் மீதான வரியை ரூ.10, டீசல் மீதான வரி ரூ.13 என உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 64%, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி 63%, இங்கிலாந்தில் 62% பெட்ரோல், டீசல் மீது வரிவிதிப்பாக உள்ளது. 

இதையடுத்து ஸ்பெயினில் 53%, ஜப்பானில் 47%, கனடாவில் 33%, அமெரிக்காவில் 19% வரிவிதிப்பு உள்ளது. இந்த வரிவிதிப்பு மூலம் அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ஏப்ரலை தவிர்த்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் ஏற்றப்பட்ட வரி உயர்வால் அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மத்திய அரசுக்கு ரூ.2 லட்ச கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்