#Breaking:ஒமைக்ரான் பரவல்:இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு,அங்கு 3 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் நான்கு  டி20 போட்டிகளில் வருகின்ற டிச.17 ஆம் தேதியிலிருந்து விளையாட இருந்தது.இதற்காக , இந்திய அணி வருகின்ற டிச.8 ஆம் தேதியே தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது.

இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றானது பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.மேலும்,இப்போட்டிகளில் இந்தியா பின்னர்  விளையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.