இந்தியாவில் அடுத்த வருட தொடக்கத்தில் 100 மில்லியன் டோஸ் தயாரிக்கப்படும் – ரஷ்யா

இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா அறிவித்து உள்ளது.

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெட்டிரோ, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வருடத்திற்கு 100 மில்லியன் டோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஒரு அறிக்கையில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில், ஸ்பூட்னிக் வி மருத்துவ இடைக்கால முடிவுகள் தடுப்பூசி 95 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு சர்வதேச சந்தைகளில் ஒரு டோஸுக்கு 10 ரூபாய் விலைக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இது, பதிவுசெய்யப்பட்ட வேறு சில கொரோனா தடுப்பூசிகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.