ஜி-20 நாடுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சி அதிகம்.! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்.!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதார தற்போதைய சூழ்நிலை, பொருளாதார வளர்ச்சி, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார்.
2020-2021 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கிறது என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது எனவும், இது உலக ஜி-20 நாடுகளிலேயே அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஜி.டி.பி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.