ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றைய நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கல பதக்கத்தை வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை மூலமாக ஒட்டுமொத்த நாட்டின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆண்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…
Election2024 : இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…
Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…