இந்தியா , பாகிஸ்தான் போட்டி மழையால் தற்காலிமாக நிறுத்தம் !

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.
இந்நிலையில் இந்திய அணி 46.4 ஓவரில் விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியை தற்காலிகமாக நிறுத்தினர்.இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் குவித்து உள்ளனர்.
 

author avatar
murugan