இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்காக ரோகித் சர்மாவிடம் 2 டிக்கெட்டுகளைக் கேட்ட ரசிகர்.
நேற்று முன்தினம் அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிடம் ரசிகர் ஒருவர் ” இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி 20 உலகக்கோப்பை (IND vs PAK) போட்டிக்கான 2 டிக்கெட்டுகள் தேவை ப்ளீஸ் என பதாகை மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த புகைப்படம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகளவில்வைரலாகி வருகிறது. வருகின்ற 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்காக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில், இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டி குறித்து ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. ரோஹித் சர்மா தனது ரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…