கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்ற கடற்படை அதிகாரிகள்-ஆப்ரேசன் டால்பின் நோஸ் மூலம் ஆப்பு வைத்த உளவுத்துறை

  • பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது
  • மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திரா போலீசார் இணைந்து நடத்திய ‘டால்பின் நோஸ்’ஆப்ரேசன் மூலம் – அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானுக்காக உளவுபார்த்தாக இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட இதற்கு துணையாக இருந்த ஹவாலா நவர் ஒருவரையும் மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திரா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் வசமாக  சிக்கி  உள்ளனர்.

சிக்கியதன் பின்னனி குறித்து பார்ப்போம் இந்திய கடற்படை தொடர்பான ரகசியங்களை எல்லாம் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 7 கடற்படை அதிகாரிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து கையும் களவுமாக மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திர போலீசார் இணைந்து  டால்பின் நோஸ் என்ற பெயரில் மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்தனர்.

மேலும் இவர்களின் கூட்டாளியான ஹவாலா நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தானிற்கு கடத்துவது தொடர்பாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆப்ரேசன் டால்வின் நோஸ் சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்டது அதன் அடிப்படையில்  அதிரடியாக களத்தில் இறங்கி வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விஜயவாடா என்.ஐ.ஏ  நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தப்பட்டு ஜன.,3 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

author avatar
kavitha