இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்!! ஆஸ்திரேலியா திணறல் துவக்கம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவின் சார்பில் துவக்க பந்துவீச்சாளர்கள் ஆக முகம்மது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் பந்து வீசினர். 6வது ஓவரின் கடைசி பந்தில் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சின் ஸ்டம்புகளை சிதறடித்தார்

அடுத்த ஒவரின் நான்காவது பந்தில் அந்த அணியின் விக்கெட் கீப்பரை முகமது சமி வெளியேற்றினார். தற்போதைய நிலவரப்படி 16 ஓவர்களில் 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி.

author avatar
Srimahath

Leave a Comment