நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி

மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மத்திய-மாநில அறிவியல் மாநாடு ‘சப்கா பிரயாஸ்’ என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று, நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் பங்கு மிகவும் முக்கியமானது.”

மேலும், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், 2015ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கொண்டாடும் போது, ​​அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும். நமது அரசாங்கம் அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment