கொரோனா மட்டுமின்றி நிறைய சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது- பிரதமர் மோடி உரை!

இந்தியா கொரோனா வைரஸ் மட்டுமின்றி, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா,  தொடங்கியது. அந்த விழாவில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், இந்தியா கொரோனா, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தொடர்ந்து இதுபோன்ற சவால்களை சந்தித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவை அவசியம் என தெரிவித்த அவர், இந்தப் போரின் முக்கிய திருப்புமுனை என்பது சுயசார்பு இந்தியா திட்டம் தான் என பிரதமர் மோடி உரையாற்றினார்.