2-வது இடத்தில் இந்தியா….! தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது..!

வேகமாக தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிலும், கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேகமாக தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.