இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசியை அதிகளவில் கண்டுபிடிக்கும் திறன் உள்ளது- எய்ம்ஸ் இயக்குனர்!

கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா, இந்தியா இஸ்ரேல் நாடுகளுக்குள் நல்லுறவு வலுவாக உள்ளதாகவும், கொரோனா தாக்கத்தின் போது இஸ்ரவேலுக்கு இந்தியா மருந்துகளை அளித்து உதவியதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டிலிருந்து நவீன ரோபோட்டிக் மருத்துவ உபகரணங்களை அந்நாட்டு தூதர் அவர்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என கூறிய அவ,ர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன்  இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், தடுப்பூசியின் விதிகள் உட்பட பல நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு ஊசி பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal