இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆறு பள்ளி வாகனங்கள் இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா சார்பில் நேபாளத்துக்கு 39 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 பள்ளி வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு நேபாளத்திற்கு நாற்பத்தி ஒரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 6 பள்ளிப் பேருந்துகளை இந்தியா வழங்கியிருந்தது .அதுபோல தற்பொழுதும் நேபாளத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்க்கு எதிரான நேபாளத்தின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய அரசின் சார்பில், வென்டிலேட்டர்கள், அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதரக அதிகாரிகள் 39 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அதனுடன் 6 பள்ளி வாகனங்களையும் நேபாள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…