ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ரோஹித் சாதனை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது.

டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்தனர்.

ஈரமான அவுட்ஃபீல்டுக்கு மத்தியில் ஆட்டம் எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அணி 7.2 ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டியது.டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment