உலக்கோப்பையை உள்ளங்கையில் எடுத்து வர புறப்பட்டது கோலி படை

12 வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வரும் 30 தேதி முதல் ஜூலை 14 தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் இந்திய உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும்  இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்ல நள்ளிரவு புறப்பட்டது.

மேலும் இந்திய அணியானது இங்கிலாந்து புறப்படும் புகைப்படங்களை எல்லாம்          பிசிசிஐ  வெளியிட்டது.  அதில் வீரர்கள் எல்லாம் உற்சாகத்தோடு கெத்து காட்டி கொண்டு இருப்பது போன்ற புகைபடங்களை வெளியிட்டது.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது மே 25 தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இதன் பின்னர் மே 28 வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.

இந்த இரண்டு பயிற்சி ஆட்டம் முடிந்த பின் ஜுன் 5 தேதி தென்னாப்பிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment