இந்தியா மற்றும் சீனா ராணுவ பேச்சுவார்த்தை..!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கமாண்டர் நிலை 15வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி இந்தியப் பக்கத்தில் உள்ள சுஷுல் மோல்டோ சந்திப்புப் புள்ளியில் நடைபெறும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருதரப்புக்கும் இடையே 14 சுற்று பேச்சு வார்த்தை பல பிரச்சனைகளுக்காக நடைபெற்றது.  அதில், பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள், கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் கோக்ரா வெப்ப நீரூற்றுகள் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இரு தரப்பும் இப்போது மீதமுள்ள பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தும்  என கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவின் சமநிலையான நிலைப்பாட்டில் உள்ளது. கடந்த  ஜனவரி மாதம் இந்தியா மற்றும் சீனா ராணுவங்களுக்கு இடையே 14வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

author avatar
murugan