#INDvNZ : 18வது ஓவரிலேயே அபார வெற்றி.! தொடரை கைப்பற்றியது இந்தியா.!

17.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வென்று இந்த டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட t20 தொடரின் 2-வது போட்டி இன்று ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய வந்த மார்ட்டின் கப்டில் 5ஓவரில் தீபக் சாஹர் ஓவரில் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் வந்த வேகத்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் டேரில் மிட்செல் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து மத்தியில் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் குவிக்க அடுத்தடுத்து களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன் எடுக்க இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 2, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், அஸ்வின் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை கடந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சௌதி பந்தில் குப்திளிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து, சௌதி பந்தில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும், ரிசப் பண்டும் களத்தில் கடைசி வரை நின்று 17.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி அணியை வெற்றிபெற செய்தனர். இடையில் சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்திருந்தார்.

இந்த போட்டியில் வென்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2இல் வெற்றி பெற்று 2-0 என்கிற கணக்கில் நியூஸிலாந்திடம் இருந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.