3 வது டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 3-வது டி20  போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி  கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்: 

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், பாடிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேதன் சகரியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக நவ்தீப் சைனிக்கு பதிலாக சந்தீப் வாரியர் களமிறங்கியுள்ளார்.

இலங்கை அணி வீரர்கள்: 

அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா,தசுன் ஷானகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, பாத்தம் நிசங்கா, அகில தனஞ்சய, துஷ்மந்த சாமே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan