மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 3800க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 3890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 3,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,42,900 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,739 ஆக உயர்ந்துள்ளது. அதில், 4,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 73,792 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு 62,354 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.