கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! செப்.,7 வரை நகை கடைகள் மூடல்.!

கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! செப்.,7 வரை நகை கடைகள் மூடல்.!

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் இன்று தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை நகை கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் தாக்கத்தை பொறுத்து பல இடங்களில் ஊரடங்கில் தளர்வும், கட்டுபாட்டுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அங்குள்ள நகை கடைகளையும், நகை பட்டறைகளையும் இன்று தொடங்கி வரும் 7ஆம் தேதி வரை மூடவுள்ளதாக நகை கடைகள் மற்றும் நகை பட்டறைகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube