கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..!

கேரள மாநிலத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 20,687 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 115 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20,788 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் குணமடைந்து இதுவரை 37,17,004 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா சிகிச்சையில் 2,18,892 பேர் உள்ளனர்.  கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.