மதுரையில் அதிகரிக்கும் கொரோனா.. விற்கப்படும் “மாஸ்க் புரோட்டா” ரூ.50 தான்!

மதுரையில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் சூழலில், மக்களிடையே முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அங்கு முகக்கவச வடிவிலான புரோட்டா விற்கப்படுகிறது.

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,057 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா அதிகளவில் பரவிவரும் சூழலில், மக்கள் முகக்கவசத்தை அணிவதை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் “முகக்கவச புரோட்டா” விற்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்த ஒரு புரோட்டாவின் விலை ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திம் விதமாக, இந்த வகையான புரோட்டா தயாரிக்கப்பட்டு வருவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.