விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

முகுர்த்த தினம் மற்றும் விநாயக சதுர்த்தி காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது .

விநாயகர் சதுர்த்தி நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இன்று முகுர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இருமடங்குளாக அதிகரித்துள்ளது இந்நிலையில் நாளை முகுர்த்த தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுக்கள் பூக்களை குறைந்த அளவே வாங்கி செல்லகின்றனர் ஆனால் மக்களின் கூட்டம் சந்தைகளில் அலைமோதுகிறது .மக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் .

author avatar
Dinasuvadu desk