பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

பால் தினகரனுக்கு சொந்தமான தமிழகம் முழுவதும் 28 இடங்களில் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைவர் பால் தினகரன் .இவர் பல்வேறு மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று  ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.