வீடுகளில் ஒளிரும் விளக்குகள்! களைகட்டும் கார்த்திகை தீபத்திருநாள்!

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், பீங்கான்  மற்றும் கண்ணாடி போன்ற அகல்விளக்குகளை  வாங்கி, அவற்றுள் நெய் அல்லது எண்ணெய்  விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர்.

இதனை வீடுகளின் வாசற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள் மற்றும் முற்றங்களில் வைத்து அலங்கரிப்பார்கள்.  வீடுகளில் மட்டும் விளக்கேற்றாமல் அலுவலகங்கள், கோவில்களிலும் விளக்குகள் ஏற்றுவதுண்டு. சிலர் அவர்களது வீடுகளில் மூன்று நாட்கள் வரை விளக்கேற்றுவது உண்டு.

அதிலும், முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.