அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் .சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை .தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.