மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தான் பயிற்சியை மேற்கொண்டேன் – தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து

மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தான் பயிற்சியை மேற்கொண்டேன் – தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து

மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தான் பயிற்சியை மேற்கொண்டேன் என்று தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இது தொடர்பாக தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கூறுகையில், விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், என்னை போல் பல வீராங்கனைகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தான் பயிற்சியை மேற்கொண்டேன், ஊக்கமளித்தால் தொடர்ந்து சாதனை புரிவேன் என்று தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *