கஜா தாக்குதலுக்குள்ளான அதிராம்பட்டினம்….!நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்…!

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.நவம்பர் 17 ஆம் தேதி காலை முதலே  கூட தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி  மக்கள் முழுமையான மீட்புப்பணி கேட்டும் , அரசின் நிவாரண மெத்தனத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தஞ்சை மாவட்டம் முழுவதும் தொலை தொடர்பு வசதி , மின்சார வசதி இல்லாத காரணங்களால் நிவாரண பணிகளை பெறுவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும்  சென்னையில் இருந்து நிவாரண பொருட்களை கொண்டு வர லாரியும் தேவைப்படுகிறது.உதவி செய்ய விரும்புவோர்  கீழ்காணும் நம்பரை தொடர்பு கொள்ளவும்….

பெயர் M.காஸ்ட்ரோ – 8903042199

Leave a Comment