4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜகவும் பிரசாரம் செய்யும் – தமிழிசை

4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜகவும் பிரசாரம் செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு திமுகதான் காரணம் ஆகும். 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜகவும் பிரசாரம் செய்யும்.சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment