22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு-பொன்முடி

தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது இந்தியா டுடே.14 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.மேலும் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் 5 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்எல்ஏ பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுகவினரால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment