தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியம் இல்லை- செங்கோட்டையன்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு சாத்தியம் இல்லை என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொதுதேர்வுகள் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதுபற்றி எந்த குழப்பமும் வேண்டாம் என கூறிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு சாத்தியமே இல்லை என அவர் கூறினார்.