தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேர் பாதிப்பு 288 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 31,892 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்: 31,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 288 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் இன்று 20,037 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 13,18,982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன மேலும் இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,47,85,458 ஆகவும், தற்போது 1,95,339 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

author avatar
Dinasuvadu desk