மதுரை குழந்தைகள் விற்பனை – மேலும் இருவர் கைது..!!

மதுரை குழந்தைகள் விற்பனை – மேலும் இருவர் கைது..!!

மதுரையில் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய சிவக்குமார் மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் மூலம் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த காப்பக ஊழியர்கள், குழந்தையை வாங்கிய தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்,குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், மாதார்ஷா, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிக்கிய இடைத்தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube