கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 2,21,333ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,474 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 813 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 80,818 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube