கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,569 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று 1,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மொத்த பாதிப்பு 39,708 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 10 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.

14,094 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,304 பேர் குணமடைந்தனர். இதுவரை 26,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.