ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிந்தாரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிந்தாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது, அவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் போர்க்கருவிகளை கைப்பற்றியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Operation Trinetra II.
In a major Cordon and Search Operation, acting on specific intelligence four terrorists were eliminated in a Joint Operation by #IndianArmy & @JKP near Sindarah and Maidana villages in tehsil #Surankote of #Poonch district. Along with the terrorists four… pic.twitter.com/OFtSNmdDVs— White Knight Corps (@Whiteknight_IA) July 18, 2023