வரலாற்றில் இன்று ( மார்ச் 4 ) ! தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்ட நாள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும்  மார்ச் 4-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966-ஆம் ஆண்டு தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.