தலைநகரில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை – காவல் துறை தகவல்

கடந்த ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில்  1,699 கற்பழிப்பு சம்பவங்கள், 2,186 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 65 பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளதாக டெல்லி காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வழக்குகள் 2019 ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது குறைந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி, 2,168 கற்பழிப்புகள், 2,921 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 109 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் கற்பழிப்பு வழக்குகளில் 1.77 சதவீதம் அந்நியர்கள் குற்றவாளிகள் என்றும் இது 2019-ஆம் ஆண்டில் 2.20 சதவீதமாக இருந்தது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.குற்றவாளிகளில் 44 சதவீதம் பேர் குடும்பம் அல்லது குடும்ப நண்பர்கள் என்றும் 26 % பிற அறியப்பட்ட நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக,டெல்லி காவல்துறையினர் கடந்த ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2,66,070 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 3,16,261 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டை விட 15 சதவீதம் குறைவு ஆகும்.ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை, ஒவ்வொரு 19 மணி நேரத்திற்கும் ஒரு கொலை மற்றும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரில் கொலை வழக்குகள் 9.40 சதவீதம் குறைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் இதுபோன்ற 472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2019 -ஆம் ஆண்டு 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் வழக்குகள் 26.67 சதவீதமும், கொள்ளை வழக்குகள் 27.33 சதவீதமும், மோட்டார் வாகன திருட்டு வழக்குகள் 24.23 சதவீதமும், பிற திருட்டு வழக்குகள் 30.52 சதவீதமும் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 0.35 சதவீதம் ஓரளவு உயர்ந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் 1,956 ஆக இருந்த நிலையில், 2020 -ஆம் ஆண்டு மொத்தம் 1,963 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

20 mins ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

25 mins ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

1 hour ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

1 hour ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

2 hours ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

2 hours ago