சத்தீஸ்கரில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ளதால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.பின்னர்,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வர மறுக்கின்றனர்.இதனால்,அம்மாநில பழங்குடி நலத்துறை அதிகாரி கே.எஸ் மஸ்ராம் என்பவர்,தனது ஊழியர்களிடம் கொரோனா தடுப்பூசி போடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்,அவ்வாறு தடுப்பூசி போடத் தவறினால் அடுத்த மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து மஸ்ராம் கூறுகையில்,”எனது நோக்கம் எனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதுதான்.அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை”,என்று அவர் கூறினார்.
இதனையடுத்து,உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை ஊழியர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…