#JUSTNOW: வேத மந்திரங்களுடன் அயோத்தியில் பூமி பூஜை துவங்கியது.!

 அயோத்தியில் தற்போது ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலில் தற்போது பூமி பூஜை நடைபெற்று வருகிறது.

அங்கு வேத மந்திரங்களுடன் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை துவங்கியது. அந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு செய்து வருகிறார்.

இதன் பின் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்ட இருக்கிறர். இதற்கிடையில் அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி வழிபாடு செய்தார் அதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலிளும்  தரிசனம் செய்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.