ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரத்தின்போது பாஜகவுக்குப் பதில் தவறுதலாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் .ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.இவரது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றது.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பின்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதனிடையே நவம்பர் 3-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே பாஜக வேட்பாளர் இமார்த்தி தேவியை ஆதரித்து அக்கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,உங்கள் கைகளை உயர்த்தி நடைபெறும் தேர்தலில் ‘கை’ சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.பின்பு பேச்சை திருத்திக்கொண்டு பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று பேசினார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.கை சின்னம் என்பது அவர் இதற்கு முன் இருந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம் ஆகும்.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…