2012இல் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி சுருதி, உயிரிழந்த வழக்கு! 8 பேரும் விடுதலை.!

2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவு.

தாம்பரம் தனியார் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 2012 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், விபத்தில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்தில் இருந்த ஓட்டையை மறைத்து வைத்திருந்த பள்ளியின் அலட்சியத்தால் சிறுமி ஓட்டையின் வழியே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பேருந்திற்கு அனுமதி அளித்திருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், மற்றும் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று விடுதலை என செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment