விஷால் படத்தின் சண்டை காட்சிக்காக விலையுயர்ந்த விமானத்தில் பட பிடிப்பு

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “சண்டக்கோழி -2” இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து விஷால் “அயோக்கியா” நடித்து உள்ளார்.இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆக்‌ஷ்ன் திரில்லர் கொண்டவையாக உருவாக்கி வருகின்றனர். படத்தின் பட பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஒரு காட்சிக்காக விலையுயர்ந்த போயிங் 757-200 ரக விமானத்தை பயன்படுத்த உள்ளனர்.இந்த விமானத்தில் ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இயக்குனர் மிஸ்கின் உடன்  “துப்பறிவாளன்- 2″படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

author avatar
murugan

Leave a Comment