நான் இப்போ பிஸி… ஆனா வாய்ப்பு கொடுத்த அவர மறக்க முடியுமா?- யோகி பாபு.!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ வைராகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய யோகி பாபு ” படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி..15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாக்யராஜ் ஆபீஸ் வாசலில் வாய்ப்பு கேட்டு பல நாள்கள் நின்று இருக்கிறேன்…சித்து +2 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன்.. ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பேன்..நான் இப்போ பிஸியாக இருக்கேன். அதுக்காக எனக்கு வாய்ப்பு கொடுத்த அவர மறக்க முடியுமா..? பாக்காமல் போனா அது தப்பு இல்லையா… அதான் நான் இங்கு வந்தேன்..நான் மிகவும் ரசிக்கும் இயக்குனர் அவர்..அவருடைய பையன் படம் நடிக்கும் போது எனது பக்கத்திலிருந்து ஒரு சிறிய சப்போர்ட்காக இந்த படத்தை நான் செய்தேன்.. சாந்தணு இன்னும் எத்தனை படங்கள் நீங்க பண்ணாலும் நான் மீண்டும் மீண்டும் உங்க கூட நடிப்பேன்..” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.