இளையராஜா 75 நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் : நடிகர் விஷால்

இளையராஜா 75 நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால் கூறியதாவது, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப். 2 , 3 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ள “இளையராஜா 75” நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment