திருமண அழைப்பிதழ் இருந்தால் ஜவுளி, நகைக் கடைகளுக்குள் செல்லலாம் – கேரள அரசு அறிவிப்பு!

கேரளாவில் திருமண அழைப்பிதழ்கள் இருந்தால் மட்டுமே ஜவுளி மற்றும் நகைக் கடைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கேரளாவில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அங்கு புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ,நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் அவர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

அதன் பின்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கேரளாவில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பொது இடங்களில் நடை பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து நடைபயிற்சி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலுமமேலும் ஸ்டேஷனரி கடைகள் திறப்பதற்கு தற்பொழுது அனுமதி இல்லை எனவும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் ஜவுளி, நகை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்க அனுமதிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் நகை மற்றும் ஜவுளி கடைகளுக்குள் திருமண அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகளை  தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், மத்திய மாநில அலுவலகங்களில் ஜூன் 7ஆம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்கள் உடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

52 mins ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

1 hour ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

2 hours ago

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

2 hours ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

2 hours ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

3 hours ago