முகக்கவசம் அணியாவிட்டால் 4 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும்! உத்திரபிரதேசத்தில் அதிரடி அறிவிப்பு!

முகக்கவசம் அணியாவிட்டால் 4 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும்.

இந்தியா முழுவது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில், பைரோசாபாத் மாவட்டத்தில், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு, 4 மணி நேரம் விழிப்புணர்வு பாடம் நடத்தப்படும் என வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், அவர்கள், ‘முகக்கவசம் அணிய வேண்டும்.’ என 500 முறை எழுத வேண்டும் எனவும் அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.