கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன்-எடியூரப்பா..!

கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன்-எடியூரப்பா..!

  • எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி வேறு முதல்வரை நியமிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
  • கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி வேறு முதல்வரை நியமிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எடியூரப்பாவை மாற்ற சில பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை கட்சி மேலிடம் மாற்ற விரும்புவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து  ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எடியூரப்பா, கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன்.  டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வகையில் நான் முதல் முதல்வராக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகுவேன் என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube