கொரோனா பாதிப்பு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் – பீலா ராஜேஷ்

கொரோனா பாதிப்பு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் – பீலா ராஜேஷ்

கொரோனா பாதிப்பு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை, 106,750 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள், புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பின்படி, ஒருவருக்கு கொரோனா தொற்று  சராசரி அளவில் இருந்தால், அவரை 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் என  அறிவித்துள்ளார். அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube